| 0 Kommentare ]


இளம்பெண்கள் பெரும்பாலும், அழகான ஆண்களை திருமணம் செய்து கொள்ளவே விரும்புவர். ஆனால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமலதா என்ற இளம்பெண், பாம்பை திருமணம் செய்துள்ளார். ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள அரபள்ளி என்ற குக்கிராமத்தை சேர்ந்த பஞ்சு விவசாயி கிருஷ்ணன் ரெட்டி- சுபத்ரா தம்பதியின் மூத்த மகள் சுமலதா. இவர் உள்ளூர் பள்ளியில் 10ம் வகுப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக, வெமுலவாடாவில் ஒரு குருகுலத்தில் சேர்ந்தார். விடுமுறையில், தனது கிராமத்திற்கு வந்த சுமலதா, தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பாவும், அம்மாவும் வேலைக்காக, வெளியே சென்றிருந்தனர். ஒரு தம்பியும் பள்ளிக்கூடம் சென்றிருந்தான். அப்போது, சுமலதா படுத்திருந்த கட்டிலில், ஒரு மஞ்சள் நிறப் பாம்பு படுத்திருந்தது. இதை பார்த்து சுமலதா அலறினார். உடனே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அந்தப் பாம்பை அடித்து விரட்டினர். ஆனால், சில தடவைகள் அந்த பாம்பு சுமலதாவுக்கு மட்டும் தென்பட்டது. இதை சுமலதா, தனது தந்தை கிருஷ்ணா ரெட்டியிடம் சொல்ல, அவர் அந்த பாம்பை அடித்துக் கொன்றார்.
அந்த சம்பவத்திற்கு பின், அந்த குடும்பம் பெரும் சோதனைகளை சந்தித்தது. வீடு, நிலபுலன்கள் என அனைத்தையும் இழந்தனர். குடும்பம் வறுமைக்கு சென்றது. நெருக்கமான உறவினர்கள் சிலரும் உயிரிழந்தனர். அதன் பின், சுமலதாவின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

இது குறித்து அவர் கூறியதாவது: பத்ராசலத்திற்கு கல்வி சுற்றுலா சென்றேன். அங்கு வந்த ஒரு அதிசய மனிதன், “நீ ஒரு அதிசயப்பிறவி, மக்களின் குறைகளை தீர்ப்பாய்” என்று கூறிச் சென்றான். வீடு திரும்பிய நான், பாம்பு கடவுளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினேன்.
அதேபோன்று திருமணம் செய்து கொண்டு, ஒரு கோவிலையும் உருவாக்கி, பூஜை செய்து வருகிறேன். நான் பாம்பு கடவுளை திருமணம் செய்து கொண்டு, நாகதேவதையாக மாறிய பின், எனது குடும்பத்தின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி விட்டன. கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள், இந்த கோவிலுக்கு நம்பிக்கையோடு வந்து, தங்கள் குறைகள் நீங்கி செல்கின்றனர்.

அவர்கள் அளிக்கும் காணிக்கையில் தான், இந்தக் கோவிலை நிர்வகித்து வருகிறேன். என்னிடம், அபூர்வ சக்தி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். என்னிடம் வரும் போது, அவர்களின் பிரச்சினை தீருவதாக நினைக்கின்றனர். தெலுங்கானா பகுதி மக்களின் தனிமாநில கனவு வரும் 2012ம் ஆண்டில் நிறைவேறி விடும் என்று சுமலதா கூறுகிறார்.

| 0 Kommentare ]


என்னெல்ஸ் ஒப் இன்டர்னல் மெடிசின் என்ற அமைப்பினர் இது தொடர்பாக ஆய்வொன்றை நடத்தியுள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வயதானவர்களிடமும் மேலும் பல நாட்டைச் சேர்ந்தோரிடமும் கேள்வி பதில் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வயதானவர்களிடையே பாலியல் ஆசை மூன்றில் ஒரு பங்காக இவ்வாண்டு அதிகரித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் 90 வயதைத் தாண்டிய முதியவர்களில் 11 வீதமானோர் தமக்கு தொடர்ந்தும் செக்ஸில் ஈடுபட ஆசை தெரிவித்துள்ளனர். உலகலாவிய ரீதியில் 90 வயதிற்கு மேற்பட்ட 10 பேரில் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஆய்வு தெரிவிக்கின்றது. அதேபோன்று 75 முதல் 79 வயதானவர்களில் 40 வீதமானவர்கள் தமது பாலியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர்.

| 0 Kommentare ]



உலகில் மிக உயரமான பூவாக “ரைரன் அரம்” விளங்குகின்றது. இதன் இரசாயனப் பெயர் Amorphophallus Titanum ஆகும். ரைரன் அரம் பூவின் பூர்வீக இடமாக இந்தோனேசியாவின் சுமாத்திரா மழைக்காடுகள் விளங்குகின்றன. ரைரன் மலரானது மலர்ந்த முதல் 10 நாட்களும் 77 சென்ரி மீற்றர் உயரமானதாகவும், அதன் பின் அவை 45 சென்ரி மீற்றரிலிருந்து 122 சென்ரி மீற்றர் வரை வளருமாம். ரைரன் அரம் மலரானது பூரணமாக மலர்ந்த பின் அதன் மொத்த உயரமானது 7 அடி தொடக்கம் 12அடி வரை காணப்படுமாம். அத்துடன் ரைரன் மலரினது நிறையானது 170 பவுண்டினை(77கிலோ கிராம்) விடவும் அதிகமாகுமாம்.

உலகில் மிகப்பெரிய பூவாகிய “ரப்லீசியா” மலரினைப் போன்றே இந்த மலரினுடைய மணமும் சகித்துக்கொள்ள முடியாததாகும் என்பது இந்த மலரின் விசேட அம்சமாகும். “ரைரன்” மலரானது ஒரு தனி மலரல்லவாம், ஏனெனில் இது அதிகமான சின்னஞ்சிறிய மலர்களால் உருவான ஒரு கூட்டு மலராகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

| 0 Kommentare ]


தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். நகத்துக்கு டார்க் கலர் பொலிஷ் போடுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பொலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பொலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம். பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். . நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.

| 0 Kommentare ]


இவர் தான் உலகின் மிக நீளமான வாய்க்குச் சொந்தக்காரர். பிரான்ஸிஸ்கோ டொமிங்கோ ஜோகியம் என்பது இவரின் பெயர்.

பெயரைப் போலவே வாயும் நீளம். இவரின் வாய் இப்போது உலக சாதனை. 21 வயதான இவரின் வாயின் நீளம் 17 சென்ரிமீட்டர்.


நீளமான வாய் காரணமாக இப்பேது இவரை நிறைய விளம்பர வாய்ப்புக்கள் தேடிவருகின்றன. இவரின் சொந்த நாடான அங்கோலாவில் பிரபல்யம் அடையத் தொடங்கிவிட்டார்.

பணக்காரனாக வேண்டும் என்ற தனது கனவு விரைவில் நனவாகிவிடும் என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றார் ஜோகியம்.

| 0 Kommentare ]



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

| 0 Kommentare ]


பெங்களூரை சேர்ந்த 92 வயது பாட்டி 78 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ்கிறார். தினமும் இரண்டு கப் காபி மட்டும் போதும் என்கிறார்.

மனிதனின் உடம்பிற்கு தண்ணீர் தேவையா? இல்லையா? என்ற சர்ச்சை ஒவ்வொரு முறையும் எழுந்து மறைகிறது. பெங்களூரைச் சேர்ந்த நரசம்மா என்ற 92 வயது பாட்டி மீண்டும் இந்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார். இவருக்கு 14 வயதில் மயக்கம் போன்று ஏற்பட்டு, தொண்டை வறண்டுள்ளது. அப்போது ஒரு நாளைக்கு சுமார் 10 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். இதில் அவரது உடம்பு ஊதி கால்கள் வீங்கி விட்டதாம். இதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

இவரது நிலைமையைப் பார்த்து பெற்றோர் பயந்தனர். ஆயுர்வேத டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு இவருக்கு உடம்பில் அதிகப்படியான தண்ணீர் இருப்பதாகவும், ‘ஸ்டீம் தெரபி’ (நீராவி சிகிச்சை) மூலம் 48 நாட்களுக்கு சிகிச்சை அளித்து தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பலனும் கிடைத்தது. இதற்குப் பின்னர் தண்ணீர் குடிப்பதில்லை என்று சபதம் எடுத்து, குடிப்பதை நிறுத்தி விட்டாராம்.

கடந்த 2000ம் ஆண்டில் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவில் 36 நாட்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட இவர் சாப்பிடவும் இல்லை, தண்ணீரும் அருந்தவில்லை. இவரது சுற்றுப் பயணத்தில் மொத்தமே 3 கப் காபி மட்டுமே குடித்தாராம். தண்ணீர் குடிக்காமல் எப்படி உயிர் வாழ்கிறீர்கள் என்று இவரைக் கேட்டால், நான் ஆயுர்வேத மருந்துகளை மட்டும் சாப்பிடுகிறேன். இதற்கு ஆங்கில மாத்திரைகளைப் போல தண்ணீர் தேவையில்லை. கோடை காலங்களில் வெப்பத்தில் இருந்து உடம்பை பாதுகாக்கவும்,

உடம்பில் தண்ணீரின் அளவை சரிபடுத்தவும் ஈரத் துணிகளை உடுத்துவேன். அரிசி சாதம், உலர்ந்த பழங்கள் தான் சாப்பிடுவேன். தினமும் 5 மணி நேரம் பிரார்த்தனையில் ஈடுபடுவேன். ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு உபவாசம் இருப்பேன் என்கிறார். மனித உடம்பிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அபூர்வமாக நமது உடல் உறுப்புகள் தண்ணீர் தேவையை பல்வேறு வழிகளில் உடம்பில் இருந்து எடுத்துக் கொள்கிறது. இந்த மூதாட்டியின் கூற்றை நிரூபிக்க, அவரது உடம்பை முழுவதும் சோதனை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

| 0 Kommentare ]


பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்குகள் தேவைதானா?

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து பெண்ணானால் அதனைக் கருவிலேயே அழிக்கும் முயற்சிகள் இலங்கையில் இல்லை. ஆனால் கருவிலேயே பெண் குழந்தையை அழிப்பது மீறிப் பிறந்துவிடும் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்வது எல்லாம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இன்றும் பரவலாக வழக்கில் உள்ள நடைமுறைகள்.

அவ்வாறு கருவிலேயே கட்டவிழ்த்து விடப்படும் பெண் மீதான வன்முறைகள் கல்லறை வரைக்கும் தொடர்கின்றன.

தாய்வழிச் சமூக அமைப்பில் உயிர் உற்பத்தியிலும் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை உருவாக்குதலும் சம உரிமையோடும், சுதந்திரமாகவும் செயற்பட்ட பெண்கள் நிலவுடமைச் சமூக அமைப்பில் துணை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தினரின் அனேக சடங்குகள் பெண்களை மையமாக வைத்தே கொண்டாடப்பட்டன. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த ஒழுக்கக் காவலர்களாகவும் பெண்களே இருக்க வேண்டும். போன்ற கருத்துக்கள் எல்லாம் பின்னாளில் தோற்றம் பெற்றவைதான். பெண்களை அடிமைப்படுத்தும் சடங்குகளில் முக்கியமானவை ‘பூப்புனித நீராட்டு விழாக்கள், பெண்கள் மறு உற்பத்திக்குத் தயாராகிவிட்டதை உலகுக்கு உணர்த்தும் விழாவாகவே அது இன்று இருக்கின்றது.

பெண் பூப்படைதல் என்பது பல சமூகங்களில் கொண்டாட்டத்திற்குரியதாகவே இருந்திருக்கின்றது.

புதிய உலகத்தில்

பெரிய மனுசியாய்

கடமைகளுடன்

கால்தடம் பதிக்கிறாய்

வா

பெருமையுடனும்

மரியாதையுடனும்

வலிமை பொங்க

நடந்துவா

இன்று முதல்

நீ

நம் மக்களின் தாய்

நம் தேசத்தின் தாய்

பெண் பூப்படைதலைப் பெருமையுடன் பேசும் அப்பாச்சி இனப் பாடல் இது. முன்னைய காலங்களில் பூப்படைதல் தீட்டானதாகக் கருதப்படவில்லை. ஆனால் தந்தை வழிச் சமூக அமைப்பின் தோற்றத்தின் பின்னரே பூப்படைதல் என்பது தீட்டாகிப்போகிறது.

பெண் குழந்தை பெறுவதற்கு உடல் ரீதியாகத் தகுதிபெற்று விட்டதும் பூப்படைகின்றாள் பூப்பெய்தியதும் மாதா மாதம் அவளுக்கு மாதவிலக்கு ஏற்படுகின்றது. அவளது சினைப்பையில் உருவாகும் முட்டை கருத்தரிக்காத சமயங்களில் ஒரு சக்கரமாக ஒவ்வொரு மாதமும் அழிவடைகின்றது. முட்டை உடைந்து அழிவடையும் போது, சூழ உள்ள இழையங்களும் சிதைவடைந்து குருதியோடு வெளியேறுகின்றது.

அவ்வாறு மாதா மாதம் குருதி வெளியேறுவதாலேயே அது அசுத்தமானதாகக் கருதப்பட்டு ‘தீட்டு’ என்பதாகப் பெண்ணை ஒதுக்கி வைக்கின்றனர்.


பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:

பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்து விட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே, பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்று விட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்து விடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகி விட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆபிரிக்கா சுலு (Zulu) இனத்தில் ஒரு பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்த பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்த பெண்களும் பூப்படைந்த பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் அவரையும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்த பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. ‘பூப்பு நன்னீராட்டல்’ என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.

இச்சடங்கு குறித்த பதிவை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது. தாய் மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பெண்ணுக்கு பாலியல் உணர்வு ஏற்படுவதாகக் காட்டப்படும் காட்சி வரை உண்மை, பொய் அனைத்தையும் கலந்து கட்டிய பெருமை தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

இலங்கையில் மட்டுமல்லாமல் புலம்பெயர் வாழ்வில், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் சடங்குகளில் முக்கியமானது பூப்புனித நீராட்டு விழா.

போட்டி போட்டுக் கொண்டு மிகுந்த ஆடம்பரத்துடன் தங்கள் பிள்ளைகளின் பூப்புனித நீராட்டு விழாவை நடாத்துவதில் பெற்றோர் முனைப்புக் காட்டுகின்றனர்.

ஆரம்பத்தில் பெண்ணின் பெருமை பேசுவதாய் அமைந்த இவ்விழா பின்னர், மாதமொரு தடவை அவள் தீட்டானவளாக விலக்கானவளாக ஆவாள் என்பதை உலகுக்கும் பறைச்சாட்டும் விழாவாக மாற்றம் பெற்றிருக்கின்றது.

இவ்வாறான சடங்குகளை கேள்விக்குட்படுத்தாமல், நாம் கொண்டாடிக் கொணடிருப்பதன் காரணம் என்ன?

பெண்ணுரிமை பேசுபவர்கள், பெண் விடுதலையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள், இவ்வாறான சடங்குகள் பெண்களை எவ்வாறு அடிமைப்படுத்துகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

| 0 Kommentare ]


ஒரு குழந்தை, 'குமரி'யாக, 'குமரனா'க உருமாறும் சந்தோஷத்தை அனுபவிக்கும் பெற்றோர்கள், கூடவே, 'சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சுடணும்...' என்றும் பரிதவிப்பார்கள். கல்யாணத்துக்கேற்ற சரியான வயது எது..? இன்றைய வாழ்க்கை சூழலில் 28-35 வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இது 'சரி', 'இல்லை' என்ற இரு வேறு கருத்துகள் உலவுகின்றன.

"திருமணம் என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயம். 13 வயதிலிருந்து 19 வயது வரை உடல் வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கும். பெண்களுக்கு அப்போதுதான் கருப்பை, மார்பகம், மற்றும் ஹார்மோன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியை அடையும். 21 வயதில் மனமும், உடலும் முழுதுமாக வளர்ந்திருக்கும் என்பதால்தான் 21 வயதில் திருமணம் செய்யலாம். 18, 19 வயதில் திருமணம் செய்து வைக்கும் நடைமுறையும் நம்மிடையே இருக்கிறது. உடல் ரீதியில் பார்த்தால்... அதில் தவறில்லை. என்றாலும் சிலருக்கு அந்த வயதில் கர்ப்பத்தை தாங்கக்கூடிய வலு இருக்காது. அதனால் குறை பிரசவமோ அல்லது அபார்ஷன் பிரச்னைகளோ வரலாம்.

இதுவே 21 வயதில் எலும்புகள் பூரண வளர்ச்சி அடைந்துவிடும். எனவே, 21 முதல் 25 வயது, பெண்களுக்கு திருமணத்துக்கு ஏற்ற வயது. கூடவே, இந்த வயதில் அவர்களுக்கு இடுப்பெலும்புகள் எல்லாம் இளகிய நிலையில் இருப்பதால், பிரசவமும் சுலபமாக இருக்கும். எனவே, 25 வயதுக்குள் படிப்பு, வேலை என செட்டில் ஆகி விட்டால் தாமதிக்காமல் 'டும் டும்' கொட்டிவிடலாம். அப்படி 25 வயதுக்குள் குழந்தையும் பிறந்துவிட்டால், அந்தக் குழந்தை வளர்ந்து, சம்பாதிக்கும் காலத்தில் நீங்களும் உற்சாகமாக, ஆரோக்கியமாக, ஃபைனான்ஷியலாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.

அதுவே திருமணத்தின்போது பெண்களுக்கு வயது 27, 30, 33 என்று அதிகமாகும்போது, கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையலாம். வயது ஏறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்காக உழைப்பதில் உடல் ஒத்துழைக்காமல் போகலாம். 35 வயதுடைய தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால் குழந்தைக்கு பின்னால் பிரச்னைகள் ஏற்படலாம். அதேபோல 30-35 வயதுக்கு மேல் என்றால், பெண்களுக்கு மெனோபாஸுக்கான அறிகுறிகள், உடல்வலி, மனவலியை தர ஆரம்பிக்கும். இதனால், குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் சிரத்தையும் குறையலாம்'' என்ற டாக்டர்,

''ஆணோ பெண்ணோ... கூடுமான வரை உரிய வயதில் திருமணம் செய்து கொள்வதுதான் இயற்கையாகவே சரியானதாக இருக்கும்!''

| 0 Kommentare ]


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

| 0 Kommentare ]


பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் கர்ப்பப்பை ஒரு முக்கிய உறுப்பு. இது அடிவயிற்றினுள் காணப்படும் மாதவிடாயைத் தோற்றுவிக்கும் கர்ப்பப்பையின் உட்சுவர் எண்டோமெற்றியம் (ENDOMETRIUM) என அழைக்கப்படும். இந்த இழையம் சில பெண்களின் கர்ப்பப்பையின் உட்சுவர்ப் பகுதியில் இருப்பதுடன் கர்ப்பப் பையின் வெளியேயும் காணப்படும்.

இந்நிலை எண்டோமெற்றியோசிஸ் (ENDO METRIOSIS) எனப்படும்.இவ்வாறான பெண்களில் மாதவிடாய்க் காலங்களில் கர்ப்பப் பையின் வெளிப்புறங்களிலும் குருதிக் கசிவு ஏற்படுவதனால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

அதாவது அடிவயிற்றிலேற்படும் ஒரு தாங்க முடியாத வலியே ஆகும்.

* எண்டோமெற்றியோசிஸ் ஒரு பொதுவான பிரச்சினையா?

நீங்கள் பொதுவாக இதைப் பற்றி கேள்விப்பட்டிரா விட்டாலும் இது ஒரு பொதுவான நோயாகப் பெண்களில் காணப்படுகிறது. அதாவது நடுத்தர வயதுடைய 10 பெண்களை எடுத்தால் அதில் ஒருவராவது இந்த நோய்க்கு ஆளாகி இருப்பார். அதிலும் வைத்திய ஆலோசனைக்கு வரும் பெண்களில் கூடுதலானவர்களில் இந்நோயை காண்கின்றோம்.

* எண்டோமெற்றியோசிஸ் ஏன் ஏற்படுகின்றது?

இதற்குப் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விளக்கம் உள்ளது. அதாவது மாதவிடாய்க் காலங்களின் போது கர்ப்பப் பையின் உட்சுவர்ப் பகுதி உடைந்து வெளியேறும் போது அதன் ஒரு பகுதி பலோப்பியன் குழாயினூடாக பின்னோக்கிச் சென்று வயிற்றினுள் தேங்கி வருகின்றது. இதனால் ஒவ்வொரு மாத விடாய் காலங்களிலும் கர்ப்பப்பையின் வெளிப்புறத்திலும் குருதி கசிவுகளும் குருதி தேக்கமும் உருவாக நேரிடும். இவ்வாறே இந்த எண்டோமெற்றியோசிஸ் ஒரு பெண்ணின் அடி வயிற்றினுள் காணப்படுகின்றது.

* இதன் நோய் அறிகுறிகள் எவை?

சில பெண்களில் இந்த நோயின் ஆரம்ப நிலையில் எவ்வித நோய் அறிகுறிகளும் ஏற் படாது. மற்றையவர்களில் ஒன்று அல்லது பல நோய் அறிகுறிகள் ஏற்படும். பொதுவாக ஏற்படும் நோய் அறிகுறிகளாவன.

* மாதவிடாய்க் காலங்களில் அடிவயிற்றில் வலி.

* தாம்பத்திய உறவின் போது அடிவயிற்றில் வலி.

* பொதுவான ஒரு அடிவயிற்று வலி.

* குழந்தைப் பாக்கியம் தாமதமடைதல்.

இந்த எண்டோமெற்றியோசிஸ் நோயின்போது வயிற்று வலி மாதவிடாய் வருவதற்கு சில நாட்களின் முன்னரே ஆரம்பித்து பின்னர் மாதவிடாய் வருகின்ற நாட்கள் முழுவதும் நீடிக்கும்.

சில பெண்களில் இந்த வயிற்று வலி மாத விடாய் வராத நாட்களிலும் காணப்படும்.

தாம்பத்திய உறவின் போது ஏற்படும் வலி தாம்பத்திய உறவின் பின்னரும் சில மணி நேரம் நீடிக்கும்.

சில பெண்களில் குழந்தைப் பாக்கியம் தா மதமடைவதற்குக் காரணம், அவர்களது தாம் பத்திய உறவே ஒரு வலிமிகுந்த விடயமாக இருப்பதுடன் அப் பெண்களில் இந்த நோயி னால் பலோப்பியன் குழாய்கள் மற்றும் சூல கங்கள் என்பன ஆரோக்கியமற்றதாக இருப்ப துவுமே காரணம். அதாவது இவர்களில் சூல கங்களிலிருந்து முட்டைகள் சயாக வெளி யேற்றப்படுவதுமில்லை, அவ்வாறு வெளி யேற்றப்படும் ட்டைகள் சயாக பலோப்பி யன் குழாயினூடாக பயணிக்க டியாமல் அக்குழாய்கள் அடைபட்டும் இருக்கும். சில பெண்களில் இந்த வயிற்றுவலி அவர்கள் மலங்கழிக்கும் போதும், சிறுநீர் கழிக்கும் போதும் கூட ஏற்படும்.

இந்த நோய் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது?

உங்களது மருத்துவர், இவ்வாறான நோய் அறிகுறிகள் உங்களில் காணப்படும் போது உங்களது அடி வயிற்றைப் பசோதித்துப் பார்ப்பார். இவ்வாறு பசோதிக்கும் போது இந்நோய் இருப்பதாக சந்தேகித்தால் தலில் ஒரு ஸ்கான் (Ultra Sound Scan) பரிசோதனையை மேற்கொள்வார்.

இந்த ஸ்கான் பரிசோதனையின் போது இந்த நோயினால் ஏற்படுத்தப்படும் நாள் பட்ட குருதி சேர்ந்த சூலகக் கட்டியான சொக்லேட் சிஸ்ற் (Chocolate Cyst) இருப்பின் அதனைக் கண்டறியலாம்.

ஆனால் இந்நோயின் மற்றைய நிலைகள் இந்த ஸ்கான் மூலம் கண்டறிய முடியாது. எனவே இந்த சொக்லேட் சிஸ்ற் தவிர ஏனைய நிலைகளில் இந்நோய் இருப்பதனைக் கண்டறிய லப்பிரஸ்கோபி (Laproscopy) பரிசோதனையே சிறந்த முறை. அதாவது உங்களது தொப்பிள் பகுதியினூடாக உங்களை மயக்கிய பின்னர், ஒரு சிறிய குழாய் போன்ற ஒரு புகைப் படக் கருவியை உட்செலுத்தி வயிற் றினுள்ளே இருக்கின்ற உண்மை நில யினை நேரிலே கண்டறிந்து உறுதிப்படுத்த முடியும்.

இந்தப் பசோதனையின் போது இந்நோய் இருப்பவர்களின் அடிவயிற்றில் கருநீல மற்றும் சிவந்த புள்ளிகளாகவும் குவியல்களாகவும் இந்த எண்டோமெற்றியோசிஸ் காட்சியளிக்கும். அத்துடன் இந்நோயின் உக்கிர நிலையினையும் இப்பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

இந்தப் பரிசோதனையான லப்பிரஸ்கோப்பி முறைக்கு எடுக்கும் நேரம் 15 - 20 நிமிடங்களே ஆகும். அத்துடன் இது உங்களை முழு மயக்கத்திற்குட்படுத்தியே செய்யப்படும். மேலும் இந்தப் பரிசோதனையின் பின்னர் நீங்கள் அன்றே வீடு செல்லலாம்.

இந்நோய்க்குய சிகிச்சை முறைகள் எவை?

இந்நோய்க்கு சிகிச்சைகள் மருந்துகள் மூலம் சத்திர சிகிச்சைகள் மூலம் வழங்கப்படும்.

சில வேளைகளில் ஒரே பெண்ணிற்கே இவ்விரு முறைகளும் பாவிக்கப்படும்.

சிகிச்சை முறைகள் உங்களது வயது, உங்களது நோய் அறிகுறிகளின் உக்கிரத்தன்மை நீங்கள் கர்ப்பந்தரிக்கும் எண்ணமுடையவரா? மற்றும் உங்களது தனிப்பட்ட விருப்பம் என்பவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும்.

இந்த சிகிச்சை முறைகளின் நோக்கம் உங்களை வலிகளிலிருந்து விடுவித்து, உங்களது ஆரோக்கிய வாழ்விற்கு வழியமைத்து, உங்களது குழந்தைப் பாக்கியம் தாமதமடைந்திருப்பின் அனைத் துதப்படுத்துவதுமே ஆகும்.


* மருந்துகள் மூலமான சிகிச்சையின் பங்களிப்பு என்ன?

இந்த நோய்க்கு பாவிக்கப்படும் மருந்துகளாக ஓமோன் (Hormones) மாத்திரைகளும் வலி நிவாரணிகளும் (Pain Killers) பாவிக்கப்படுகின்றன.

இந்த ஓமோன் மாத்திரைகள் இந்நோயின் வளர்ச்சியைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தி உங்களது பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வாக அமையும்.

ஆனால் குழந்தைப் பாக்கியத்தைத் துரிதப்படுத்த நினைப்பவர்களுக்கு இந்த ஓமோன்கள் மூலமான சிகிச்சை சிறந்த தீர்வாக அமையாது. அவர்களுக்கு சத்திர சிகிச்சைகள் மூலமான சிகிச்சைகளே பலனளிக்கும்.

இந்த ஓமோன்களின் மூலமான சிகிச்சையிலுள்ள சிக்கல் என்னவென்றால் பல பக்க விளைவுகளே ஆகும். இதனால் இவை 6 - 9 மாதங்களுக்கே பாவிக்க முடியும்.


* இந்நோய்க்கு சத்திர சிகிச்சையின் (Surgery) பங்களிப்பு என்ன?

இந்த நோய்க்கான சத்திர சிகிச்சைகள் இரு வகைப்படும். அதாவது இந்த நோயினால் பாதிக்கப்பட்ட இழையங்களை மட்டும் அகற்றுதல் மற்றும் முற்றாக கர்ப்பப்பை, சூலகங்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்ட இழையங்களை அகற்றுதல்.

அத்துடன் இந்த சத்திர சிகிச்சைகள் இரு வழிகளில் செய்யப்படும்.

அதாவது வயிற்றில் ஒரு சிறு துளையை மட்டும் ஏற்படுத்தி லப்பிரஸ்கோப்பி (Laproscopy) மூலம் செய்யப்படுவது ஒன்று. மற்றையது வயிற்றில் பெரிய வெட்டை ஏற்படுத்தி பாரம்பயமாக செய்யப்பட்டு வரும் சத்திர சிகிச்சை (Laparotomy)

இளம் பெண்களிலும், குழந்தைப் பாக்கியத்தை எதிர்பார்த்து இருப்பவர்களிலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட இழையங்களை மட்டும் அகற்றி சூலகங்கள், பலோப்பியன் குழாய்கள் மற்றும் கர்ப்பப்பை என்பவற்றைப் பாதுகாப்பாக தங்கவிடப்படும்.

இதன் போதுள்ள சிக்கல் என்னவென்றால் சிறிது காலத்தின் பின் இந்நோய் அவர்களுக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது.

முற்றாக அகற்றி விடும் சிகிச்சையில் கர்ப்பப்பை, சூலகங்கள் என்பன பாதிக்கப் பட்ட இழையங்களுடன் சேர்ந்து அகற்றப்படுகிறது.

இது சற்று வயது கூடிய பெண்களிலும் (அதாவது 40 வயதை தாண்டியவர்கள்) மற்றும் மீண்டும் குழந்தை பெறும் எண்ணம் இல்லாதவர்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கர்ப்பப்பை, சூலகங்கள் என்பன அகற்றப்படும் பட்சத்தில் உங்களுக்கு இந்நோய் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை. அத்துடன் இவர்களுக்கு உடல் பலவீனமடைவதைத் தடுக்க ஓமோன் மாத்திரைகள் சிறிது காலம் பாவிக்கப்பட வேண்டும்.

எனவே வாசகர்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் பரம்பரை அலகுகளின் பங்களிப்பினால் சில பெண் களில் ஏற்படுகின்ற இந்தத் துன்பியல் நோய் பல வழிகளில் சிக்கலைத் தோற் றுவிக்கின்றது.

ஆனால் கர்ப்ப காலத்திலும் மற்றும் மாதவிடாய் முடிவடைந்த மெனோபோஸ் (Menopause) நிலைக்கு பின்னரும் இந்நோய் மறைந்து போகின்றது.

மற்றையவர்கள் இந்நோயினால் ஏற்படும் சிக்கல்களால் தொடர்ந்தும் வேதனைப்படாது, தற்போதுள்ள இவ்வாறான நவீன சிகிச்சைகள் மூலம் இதற்குத் தீர்வு கண்டு நலமுடன் வாழ ஆலோசனை வழங்குகின்றோம்.

Dr. குருசாமி சுஜாகரன்

| 0 Kommentare ]


ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.

இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன.

அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன.உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும்.

அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும்.அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.

இயற்கையை வென்றது யார் தான்...?அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்

உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.

அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.
அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காமசூத்திரம்.