| 0 Kommentare ]



பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி மாதிரி' என்று சொல்வார்கள். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஏராளமான சக்தி தேவைப்படுவதால், சத்துள்ள உணவுகளை பெண்கள் சாப்பிடுவார்கள்.

கர்ப்ப கால உணவு முறையால், தாயின் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இதனால் குழந்தை பெற்றவுடன் பெரும்பாலான பெண்கள், உடல் எடை குறைப்பிற்காக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. `உடற்பயிற்சி எல்லாம் வேண்டாம், குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தாலே போதும்', பெண்கள் எடை குறைந்து மெலிதாக மாறி விடுவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

தாய்ப்பால் மூலம் தாயின் உடலிலுள்ள பெரும்பாலான சக்தி வெளியேறுவதே இதற்கு காரணம். முதல் 14 வாரங்களுக்கு குழந்தைக்கு அதிக அளவு தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் கணிசமான அளவு எடையை இழக்கிறார்கள்.

தாய்ப்பால் அதிகம் அளிக்காத பெண்களுக்கு இந்த எடை இழப்பு ஏற்படுவது இல்லை. எனவே எடை இழக்க, பெண்கள் தாய்ப்பால் அளிப்பது நல்லது.

உலகின் அதி நிறையான மனிதனுக்கு திருமணம்

மெக்ஸகோ நகரைச் சேர்ந்த உலகின் அதி நிறைகூடிய மனிதனான Claudia Solis, Manuel (43) ஆகியோரின் திருமணம் (26-10-08) ந் திகதியன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது 2006 ம் ஆண்டில் (1.230 இறாத்தல்) 560 கிலோ எடையாக இருந்த இவருக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டமையைத் தொடர்ந்து 250 கிலோ எடை குறைக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் சிநேகிதியான Claudia Solis, 38 என்பவருக்கும் இவருக்கும் இடம்பெற்ற திருமண வைபவத்தில் 400 விருந்தாளிகள்வரை பங்குகொண்டு சிறப்பித்துள்ளனர்.


உள்ளங்கையில் இருக்கும் விரல்களுக்கிடையே `யார் சிறந்தவர்?’ என்ற போட்டி வந்தது. எல்லா விரல்களையும் விட நான்தான் சிறந்தவன்? என்று இறுமாப்புடன் கூறியது கட்டை விரல்.

இல்லை! இல்லை!! மற்ற விரல்களைவிட நானே உயர்ந்தவன். எனவே நானே சிறந்தவன் என்று பெருமை கொண்டது நடுவிரல்.
மனிதன் அணிகலனான மோதிரத்தை அணிவித்து அழகு பார்ப்பது என்னைத்தான். எனவே நானே உயர்ந்தவன் என்றது மோதிரவிரல்.

மனிதர்களுக்கு கடைக்குட்டியான செல்லப் பிள்ளைகள் மீதுதான் பிரியம் அதிகம். எனவே உங்களைவிட நான்தான் கடைக்குட்டி. அதனால் செல்லப்பிள்ளையும் நான்தான் என்றது சுண்டுவிரல்.

ஆள்காட்டி விரல் மட்டும் எதையும் சொல்லாமல் மவுனம் சாதித்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உள்ளங்கை, உங்களுக்கு நான் சரியான தீர்ப்பு கூறுகிறேன் என்று விரல்களின் போட்டிக்கு நாட்டாமை ஆனது.
நீங்கள் எல்லாம் யாருடைய கைகளில் விரல்களாக இருக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பயன் கொடுக்கிறீர்கள். ஆனால் ஆள்காட்டி விரல் மட்டும் திசை தெரியாமல் வரும் பிறருக்கும் `அதோ வழி’ என சுட்டிக்காட்டி உதவுகிறது. பிறருக்கு உதவும் பண்பினை ஆள்காட்டி விரல் கொண்டிருப்பதால் அதுவே முதலிடம் என்று உள்ளங்கை தீர்ப்பளித்தது.
நீதி: பிறருக்கு உதவுபவர்கள் மட்டுமே என்றும் முதலிடம் பிடிக்கிறார்கள்.

0 Kommentare

Kommentar veröffentlichen