| 0 Kommentare ]



உலகில் மிக உயரமான பூவாக “ரைரன் அரம்” விளங்குகின்றது. இதன் இரசாயனப் பெயர் Amorphophallus Titanum ஆகும். ரைரன் அரம் பூவின் பூர்வீக இடமாக இந்தோனேசியாவின் சுமாத்திரா மழைக்காடுகள் விளங்குகின்றன. ரைரன் மலரானது மலர்ந்த முதல் 10 நாட்களும் 77 சென்ரி மீற்றர் உயரமானதாகவும், அதன் பின் அவை 45 சென்ரி மீற்றரிலிருந்து 122 சென்ரி மீற்றர் வரை வளருமாம். ரைரன் அரம் மலரானது பூரணமாக மலர்ந்த பின் அதன் மொத்த உயரமானது 7 அடி தொடக்கம் 12அடி வரை காணப்படுமாம். அத்துடன் ரைரன் மலரினது நிறையானது 170 பவுண்டினை(77கிலோ கிராம்) விடவும் அதிகமாகுமாம்.

உலகில் மிகப்பெரிய பூவாகிய “ரப்லீசியா” மலரினைப் போன்றே இந்த மலரினுடைய மணமும் சகித்துக்கொள்ள முடியாததாகும் என்பது இந்த மலரின் விசேட அம்சமாகும். “ரைரன்” மலரானது ஒரு தனி மலரல்லவாம், ஏனெனில் இது அதிகமான சின்னஞ்சிறிய மலர்களால் உருவான ஒரு கூட்டு மலராகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

0 Kommentare

Kommentar veröffentlichen