| 0 Kommentare ]


இந்திய அரியானாவில் 66 வயதான மூதாட்டி ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். உலகிலேயே முதிய வயதில், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பெற்ற ஒரே பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டேரி தேவி. இவரது கணவர் தேவா சிங் ஒரு விவசாயி. இவர்களுக்கு திருமணமாகி 44 ஆண்டு ஆகியும் குழந்தை பேறு இல்லாதிருந்தது. பட்டேரி தேவிக்குக் குழந்தை பிறக்காததால் தேவா சிங் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அந்த பெண்ணுக்கும் குழந்தை பிறக்கவில்லை. எனவே சொத்துக்கு வாரிசு வேண்டுமே என்பதற்காக மூன்றாம் தாரமாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் அவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. வேதனை அடைந்த தேவா சிங்குக்கு ஹிஸ்சாரில், முதியவர்கள் கூட சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தகவல் கிடைத்தது. ஹிஸ்சாரைச் சேர்ந்த மருத்தவர் அனுராக் இவ்வித சிகிச்சையில் தேர்ச்சி பெற்றவர் என்பதையும் இவர் அறிந்த் கொண்டார்.

உடனே, முதல் மனைவி பட்டேரி தேவியை அனுராக்கிடம் அழைத்துச் சென்றார் தேவா சிங். சோதனை குழாய் முறையில் பட்டேரி தேவி கருத்தரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் கூறினார். இதற்கான சிகிச்சை கடந்த ஆண்டு தொடங்கியது. முதல் இரண்டு மாதங்களில் 2 கருமுட்டைகளை பட்டேரி தேவியின் கருப்பையில் மருத்துவர்கள் வைத்தனர். ஆனால் அதில் ஒரு கருமுட்டை கூட வளரவில்லை.

அடுத்து, மூன்றாவது மாதம் 3 கருமுட்டைகளை கருப்பையில் வைத்தனர். இந்த முறை 3 கருமுட்டைகளும் வளரத் தொடங்கின. கடந்த மே 29ம் திகதி பட்டேரி தேவிக்கு சத்திர சிகிச்சை மூலம் 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. 66 வயதான முதியவர் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்திருப்பது, உலகச் சாதனையாகவே கருதப்படுகிறது.

| 0 Kommentare ]



உலகில் ஒரேயொரு இந்து நாடாக விளங்கும் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் சங்கா என்ற இடத்தில் 7 கோடி ரூபா செலவில் உலகிலேயே மிகப் பெரிய சிவன் சிலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வரும் 21ம் திகதி திங்கட்கிழமை இச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. 4 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள வளாகம் ஒன்றில் இது நிறுவப்பட்டுள்ளது.


சிமென்ட் கான்கிரீட் மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 143 அடி. சிவ பெருமானின் தோளில் பாம்பும், கையில் திரிசூலமும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலையை, நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் திறந்து வைக்கவுள்ளார்.

சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு யோகா, தியான மண்டபங்கள், சுகாதார மையங்கள் ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன. 16 அறைகள் கொண்ட ஓய்வு விடுதியும் கட்டப்பட்டுள்ளது.

| 0 Kommentare ]


 
வீ‌ட்டில் இருக்கும்போது பால் ஆடையை தினமும் இர‌ண்டு முறை முகத்தில் தடவி வரலா‌ம்.
தினமு‌ம் ‌சி‌றிதளவு ஆர‌ஞ்சு பழ‌ச் சாறை எடு‌த்து முக‌த்‌தி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் முக அழகு‌க் கூடு‌ம். வெ‌ள்ள‌ரி ம‌ற்று‌ம் கேர‌ட் சாறை முக‌த்‌தி‌ல் தட‌வி வரலா‌ம். கா‌ல் வெடி‌ப்பு வ‌ந்த இட‌ங்க‌ளி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் ந‌ல்ல ப‌ல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

சரும‌த்‌தி‌ன் வற‌ட்டு‌த் த‌ன்மைய‌ை‌ப் போ‌க்க, அ‌ன்னா‌சி‌ப் பழ‌‌த்தை அரை‌த்து வற‌ண்ட பகு‌திக‌ளி‌ன் ‌மீது தடவவு‌ம். 15 அ‌ல்லது 20 ‌நி‌மிட‌ங்‌க‌ள் க‌ழி‌த்து கழு‌வினா‌ல் வற‌ட்‌சி த‌ன்மை மாறு‌ம்.

முக‌ப்பரு அ‌திகமாக வரு‌ம் பெ‌ண்க‌ள், எ‌ண்ணெ‌ய் பசையில்லாத ‌நீ‌ர் தன்மையு‌ள்ள ‌க்‌ரீமை முகத்தி‌ற்கு பயன்படுத்தவும்.

‌கி‌ளிச‌ரி‌ன் ம‌ற்று‌ம் ப‌ன்‌னீ‌ர் ஆ‌கியவை உட‌ல் சரும‌த்‌தி‌ற்கு ‌சிற‌ந்த மரு‌ந்தாக உ‌ள்ளது.

| 0 Kommentare ]


நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை பல் துலக்குவீங்க? காலை, இரவு இரண்டு வேளையும் பல் துலக்குவீர்கள் என்றால், நீங்கள் மாரடைப்பு
பற்றி கவலையே பட வேண்டாம்.

ஆம், ஒரு நாளைக்கு இரண்டு வேளை பல் துலக்குவோருக்கும், குறைந்த பட்சம் ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் பல் டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்வோருக்கும் இதய பாதிப்பு வாய்ப்பு மிகக்குறைவே என்று லண்டன் ஆய்வு கூறுகிறது.

லண்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் வாட் தலைமையில் ஆராய்ச்சி குழுவினர் இது பற்றி சர்வே எடுத்தனர். இளைய வயதினர், நடுத்தர வயதினர் என்று 11 ஆயிரம் பேரிடம் சர்வே நடத்தப்பட்டது தனி மனிதனின் வித்தியாசமான வாழ்க்கை முறை, புகை பிடித்தல், குண்டாக இருப்பது, குடும்ப பாரம்பரிய சுகாதார பின்னணி போன்றவை தான் இதய பாதிப்பு வர காரணம் என்று கருதப்பட்டது. பற்கள் ஆரோக்கியமாக இருப்பதும் ஒரு முக்கிய விஷயமாக வாட் கருதினார். சர்வேக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பலரிடமும் இதுபற்றி தகவல்கள் சேகரிக்கச் சொன்னார். பல் துலக்குவது , பல் டாக்டரிடம் காட்டுவது பற்றி முக்கியமாக கேள்வி கேட்கப்பட்டது.

சர்வேயின் முடிவில் வாட் எதிர்பார்த்தபடியே தகவல்கள் கிடைத்தன. இதய பாதிப்பு ஏற்பட, லைப் ஸ்டைல் முதல் உடல் பருமனாக இருப்பது மட்டுமின்றி, பல் ஆரோக்கியமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை உறுதி செய்தார். கிடைத்த சில முக்கிய தகவல்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை பல் துலக்குவோருக்கு பல் திடத்தன்மை குறைவதுடன், இதய பாதிப்பு&ய்க்ஷள்ல்; ஏற்பட அதுவும் காரணமாக உள்ளது தெரிய வந்தது. இந்த வகையினருக்கு இதய பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

இன்னும் சிலர் ஒரு நாளைக்கு ஒரு முறை கூட பல் துலக்குவதில்லை என்று தெரிய வந்தது. இவர்களுக்கு இதய பாதிப்புக்கு காரணியாக உள்ள ரியாக்டிவ் ப்ரோட்டீன், பைப்ரினோஜென் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு வகையினரும் சேர்த்து 70 சதவீதம் பேர் இருந்தனர். இவர்களுக்கு இதய பாதிப்பு பல வகையில் வருவதற்கான அறிகுறிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

சிலருக்கு மாரடைப்பு வந்ததும் தெரியவந்தது. இரண்டு வேளை பல் துலக்குவோருக்கு பல் சுகாதாரம் திடமாக இருப்பதுடன், இதய பாதிப்பு அறவே இல்லாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு தலைவர் வாட் கூறுகையில், ‘இதய பாதிப்புக்குக் காரணமாக பல விஷயங்கள் இருந்தாலும், பல் ஆரோக்கியமும் ஒரு காரணமாக உள்ளது பலருக்கு தெரிவதில்லை. இதை வலியுறுத்தவே நாங்கள் ஆய்வு எடுத்தோம்’ என்று தெரிவித்தார்.